சனி, 31 மார்ச், 2012

டூயட் - காதலே என் காதலே



என்  காதலே  என்  காதலே
என்னை  என்ன  செய்ய  போகிறாய்?
நான்  ஓவியன்  என்று  தெரிந்தும்  நீ
ஏன்  கண்ணிரண்டை  கேட்கிறாய்?
சிலுவைகள்  சிறகுகள் 
ரெண்டில்  என்ன  தர  போகிறாய் ?
கிள்ளுவதை  கிள்ளிவிட்டு
ஏன்  தள்ளி  நின்று  பார்க்கிறாய் ?
(என்  காதலே ...)
காதலே  நீ  பூ  எறிந்தால் 
எந்த  மலையும்  கொஞ்சம்  குழையும்
காதலே  நீ  கல்  எறிந்தால்
எந்த  கடலும்  கொஞ்சம்  கலங்கும்
இனி  மீள்வதா  இல்லை  வீழ்வதா ?
உயிர்  வாழ்வதா  இல்லை  போவதா ?
அமுதென்பதா  விஷம்  என்பதா ?
இல்லை  அமுத -விஷம்  என்பதா ?
காதலே  உன்  காலடியில்
நான்  விழுந்து  விழுந்து  தொழுதேன்
கண்களை  நீ  மூடிக்கொண்டே
நான்  குலுங்கி  குலுங்கி  அழுதேன்
இது  மாற்றமா  தடுமாற்றமா ?
என்  நெஞ்சிலே  பனி  மூட்டமா ?
நீ  தோழியா ? இல்லை  எதிரியா ?
என்று  தினமும்  போராட்டமா ?
என்  காதலே  என்  காதலே
என்னை  என்ன  செய்யப்  போகிறாய் ?
நான்  ஓவியன்  என்று  தெரிந்தும்  நீ
ஏன்  கண்ணிரண்டை  கேட்கிறாய் ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக