சனி, 25 ஜூன், 2011

சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் - அமர்க்களப்படுத்திய SPB



சத்தம்  இல்லாத  தனிமை  கேட்டேன் 
        யுத்தம்  இல்லாத  உலகம்  கேட்டேன்
ரத்தத்தில்  என்றென்றும்  வேகம்  கேட்டேன் 
         ரகசியமில்லா  உள்ளம்  கேட்டேன் 

சத்தம்  இல்லாத  தனிமை  கேட்டேன் 
யுத்தம்  இல்லாத  உலகம்  கேட்டேன்
ரத்தத்தில்  என்றென்றும்  வேகம்  கேட்டேன் 
ரகசியமில்லா  உள்ளம்  கேட்டேன்
உயிரைக்கிள்ளாத  உறவைக்  கேட்டேன் 
ஒற்றைக்  கண்ணீர்த்  துளியைக்  கேட்டேன்
வழிகள்  செய்யாத  வார்த்தைக்  கேட்டேன் 
வயதுக்குச்  சரியான  வாழ்க்கைக்  கேட்டேன்
இடிகள்  இல்லாத  மேகம்  கேட்டேன் 
இளமை  கெடாத  மோகம்  கேட்டேன்
பறந்து  பறந்து  நேசம்  கேட்டேன் 
பாசாங்கில்லாத  பாசம்  கேட்டேன்
புல்லின்  நுனியில்  பணியைக்  கேட்டேன் 
பூவின்  மடியில்  படுக்கைக்  கேட்டேன்
தானே  உறங்கும்  விழியைக்  கேட்டேன் 
தலையைக்  கோதும்  விரலைக்  கேட்டேன்
நிலவில்  நனையும்  சோலைக்  கேட்டேன் 
நீலக்  குயிலின்  பாடல்  கேட்டேன்
நடந்து  போக  நதிக்கரை  கேட்டேன் 
கிடந்து  உருளப்  புல்வெளி  கேட்டேன்
தொட்டுப்  படுக்க  நிலவைக்  கேட்டேன் 
எட்டிப்  பிடிக்க  விண்மீன்  கேட்டேன்
துக்கம்  மறந்த  தூக்கம்  கேட்டேன் 
தூக்கம்  மணக்கும்  கனவைக்  கேட்டேன்
பூமிக்கெல்லாம்   ஒரு  பகல்  கேட்டேன்  பூவுக்கெல்லாம்  ஆயுள்  கேட்டேன்
மனிதர்க்கெல்லாம்  ஒரு  மனம்  கேட்டேன் 
பறவைக்கெல்லாம்  தாய்  மொழி  கேட்டேன்
உலகுக்கெல்லாம்  சம  மழை  கேட்டேன் 
ஊருக்கெல்லாம்  ஒரு  நதி  கேட்டேன்
வானம்  முழுக்க  நிலவைக்  கேட்டேன் 
வாழும்போதே  ஸ்வர்க்கம்  கேட்டேன்
எண்ணம்  எல்லாம்  உயரக்  கேட்டேன் 
எரியும்  தீயாய்  கவிதை  கேட்டேன்
கண்ணீர்  கடந்த  ஞானம்   கேட்டேன் 
காமம்  கடந்த  யோகம்  கேட்டேன்
சுற்றும்  காற்றின்  சுதந்திரம்  கேட்டேன் 
சிட்டுக்  குருவியின்  சிறகைக்  கேட்டேன்
உச்சந்தலைமேல்  மழையைக்  கேட்டேன் 
உள்ளங்காலில்   நதியைக்  கேட்டேன்
பண்கொண்ட  பாடல்   பயிலக்  கேட்டேன் 
பறவைக்கிருக்கும்  வானம்  கேட்டேன்
நன்றி  கெடாத  நட்பைக்  கேட்டேன்
நடுங்கவிடாத  செல்வம்  கேட்டேன்
மலரில்  ஒரு  நாள்  வசிக்கக்  கேட்டேன்  
மழையின்  சங்கீதம்  ருசிக்கக்  கேட்டேன்
நிலவில்  நதியில்  குளிக்கக்  கேட்டேன்  
நினைவில்  சந்தனம்  மணக்கக்  கேட்டேன்
விழுந்தாள்  நிழல்  போல்  விழவே  கேட்டேன்  
அழுதாள்  மழை  போல்  அழவே  கேட்டேன்
ஏகாந்தம்  என்னோடு  வாழக்  கேட்டேன்  
எப்போதும்  சிரிக்கின்ற  உதடுகள்  கேட்டேன்
பனித்துளி  போல்  ஒரு  சூரியன்  கேட்டேன்  
சூரியன்  போல்  ஒரு  பனித்துளி  கேட்டேன்
ராஜராஜனின்  வாளைக்  கேட்டேன் 
வள்ளுவன்  எழுதிய  கோலைக்  கேட்டேன்
பாரதியாரின்  சொல்லைக்  கேட்டேன்  
பார்த்திபன்  தொடுத்த  வில்லைக்  கேட்டேன்
மாயக்  கண்ணன்  குழலைக்  கேட்டேன்  
மதுரை  மீனாக்ஷி  கிளியைக்  கேட்டேன்
சொந்த  உழைப்பில்  சோற்றைக்   கேட்டேன்  
தொட்டுக்  கொள்ள  பாசம்  கேட்டேன்
மழையைப்  போன்ற  பொறுமையைக்  கேட்டேன்
புல்லைப்  போன்ற  பணிவைக்  கேட்டேன்  
புயலைப்  போன்ற  துணிவைக்  கேட்டேன்
இடியைத்  தாங்கும்  துணிவைக்  கேட்டேன்  
இழிவைத்  தாங்கும்  இதயம்  கேட்டேன்
துரோகம்  தாங்கும்  வலிமை  கேட்டேன்  
தொலைந்துவிடாத  பொறுமையைக்  கேட்டேன்
சொன்னது  கேட்கும்  உள்ளம்  கேட்டேன்  
சொன்னால்  சாகும்  வேகம்  கேட்டேன்
கயவரை  அறியும்  கண்கள்  கேட்டேன்   
காலம்  கடக்கும்  கால்கள்  கேட்டேன்
சின்னச்  சின்ன  தோல்விகள்  கேட்டேன் 
சீக்கிரம்  ஆறும்  காயம்  கேட்டேன்
மூடியில்லாத  முகங்கள்  கேட்டேன் 
போலியில்லாத  புன்னகை  கேட்டேன்
தவழும்  வயதில்  தாய்ப்பால்  கேட்டேன்  
தாவும்  வயதில்  பொம்மைகள்  கேட்டேன்
ஐந்து  வயதில்  புத்தகம்  கேட்டேன்
ஆறாம்  விரலாய்  பேனா  கேட்டேன்
காசே  வேண்டாம்  கருணை  கேட்டேன்
தலையணை  வேண்டாம்  தாய்மடி  கேட்டேன்
கூட்டுக்கிளிபோல்  வாழக்  கேட்டேன் 
குறைந்தபட்ச  அன்பைக்  கேட்டேன்
இத்தனை  கேட்டும்  கிடைக்கவில்லை  இதிலே  எதுவும்  நடக்கவில்லை
வாழ்வே  வாழ்வே  வேண்டாமென்று
  மரணம்  மரணம்  மரணம்  கேட்டேன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக