ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

Lyrics: Vairamuthu
Singer: S P Balasubramaniam

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம்
உன்னை தேடுதே (2)

கண் விழித்துப் பார்த்தபோது களைந்த வண்ணமே - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(
மின்னலே)

பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞர் இல்லையா - நான்
காத்திருந்தாள் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(
மின்னலே)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக