ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலை பாயுதே

Lyrics: Vairamuthu
Singer: Swarnalatha

எவனோ ஒருவன் வாசிக்கிறான் ...இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)
தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன் கேட்பதை எவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே அவன் ஊதும் ரகசியம் புரியவில்லை

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி (2)
உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

உறக்கம் இல்லா முன்னிரவில் என் உள் மனதில் ஒரு மாறுதலா (2)
இறக்கம் இல்லா இரவுகளில் இது எவனோ அனுப்பும் மாறுதலா
எந்தன் சோகம் தீர்வதற்கு இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான் இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் (2)

மயிலிறகே - அன்பே ஆருயிரே

Singers : Madhushree, Naresh Iyer


{
மயில் இறகே மயில் இறகே
வருடுகிறாய் மெல்ல

மழை நிலவே மழை நிலவே
விழியில் எல்லாம் உன் உலா }

உயிரைத் தொடர்ந்து வரும்
நீ தானே மெய் எழுத்து
நான் போடும் கை எழுத்து அன்பே !

உலக மொழியில் வரும்
எல்லாமே நீர் எழுத்து
காதல் தான் கல் எழுத்து அன்பே ..

மயில் ...

மதுரை பதியை மறந்து
உன் மடியினில் பாய்ந்தது வைகை
மெதுவா மெதுவா மெதுவா
இங்கு வைகையில் வைதிடுகை

பொதிகை மலையை பிரிந்து
என் பார்வையில் நீந்துது தென்றல்
அதை நான் அதை நான் பிடித்து
மெல்ல அடைதேன் மனச்சிறையில்

ஒரே இலக்கியம் நம் காதல்
வான் உள்ளவரை வாழும் பாடல் !

மயில் ...

தமிழா தமிழா தமிழா
உன் தமிழ் இங்கு சேலையில் வருதா
அமிழ்தாய் அமிழ்தாய் அமிழ்தாய்
கவி ஆற்றிட நீ வருவாய்

ஒன்றாய் இரண்டாய் மூன்றாய்
அந்த வள்ளுவன் தந்தது முப்பால்
உனக்கும் எனக்கும் விருப்பம்
அந்த மூன்றாம் பால் அல்லவா

பால் விளக்கங்கள் நீ கூறேன்
ஊர் உறங்கட்டும்
உரைப்பேன் கயலு


மயில் ...

மின்னலே நீ வந்ததேனடி - மே மாதம்

Lyrics: Vairamuthu
Singer: S P Balasubramaniam

மின்னலே நீ வந்ததேனடி
என் கண்ணிலே ஒரு காயம் என்னடி
என் வானிலே
நீ மறைந்து போன மாயம் என்னடி
சில நாழிகை நீ வந்து போனது
என் மாளிகை அது வெந்து போனது
மின்னலே என் வானம்
உன்னை தேடுதே (2)

கண் விழித்துப் பார்த்தபோது களைந்த வண்ணமே - உன்
கைரேகை ஒன்று மட்டும் நினைவுச்சின்னமே
கதறிக் கதறி எனது உள்ளம் உடைந்து போனதே - இங்கு
சிதறிப்போன சில்லில் எல்லாம் உனது பிம்பமே
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(
மின்னலே)

பால்மழைக்குக் காத்திருக்கும் பூமி இல்லையா - ஒரு
பண்டிகைக்குக் காத்திருக்கும் சாமி இல்லையா
வார்த்தை வரக் காத்திருக்கும் கவிஞர் இல்லையா - நான்
காத்திருந்தாள் காதல் இன்னும் நீளுமில்லையா
கண்ணீரில் தீவளர்த்துக் காத்திருக்கிறேன் - உன்
காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

(
மின்னலே)

மார்கழிப் பூவே

Lyrics: Vairamuthu
Singer: Shobha Shankar

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை (மார்கழி)

பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்
புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்
நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்
நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்
வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்
வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்
காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்
(
மார்கழி)

(
வெண்பா பாடி வரும் வண்டுக்கு
செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்
கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு
சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2)

காவேரிக் கரையில் நடந்ததுமில்லை
கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை
(
மார்கழி)

(
வெண்பா)