ஞாயிறு, 10 மே, 2009

மெக்குலத்தை தூக்கி எறியுங்கள் ஷாருக், உதவிக்கு ஜான் புக்கனனையும் அனுப்பலாம்





இதை எழுத தொடங்கும்போது மறுமடியும் ஒரு மகத்தான இன்னிங்க்சை ஆடியுள்ளார் , மெக்குலம் . ஆசிய வீரர்களை மதிக்காத தன்மை .பி.எல் அணிகள் பலவற்றுக்கு உள்ளது , ராஜஸ்தான் ராயல்சை தவிர பிற அணிகள் ஆசிய வீரர்களின் பலத்தின் மீது நம்பிக்கை வைப்பதில்லை.
எல்லா அணிகளும் ஆஸ்திரேலியே வீரர்களையே பெருமபாலும் நம்புகின்றன. ஆஸ்திரேலியாவின் வார்னே நம் வீரர்கள் மீது வைக்கும் நம்பிக்கையை கூட, மற்ற அணி தலைவர்கள் (தோணி உட்பட) வைப்பதில்லை.


யூசுப் பதான் என்ற ஒரு பேட்டிங் சைத்தானை இந்திய கிரிகெட் அணிக்கு உருவாக்கி தந்ததில் அவருக்கு பெரும் பங்கு உள்ளது. அடுத்து பி எல் ஆரம்பிக்கபட்டதன் நோக்கமாய் சொல்லப்படும் இளம் வீரர்களுக்கு அனுபவம் எனும் குறிகோளையும் அந்த ஒரு அணி மட்டுமே நிறைவேற்றி வருகிறது.
வங்கதேச ஆல்ரௌண்டரான சாகிப் அல் ஹசன் எனும் மிக சிறந்த பேட்டிங் மற்றும் சுழல் பந்து வீச்சாளரை பி எல்லில் அந்த அணி வீரரும் எடுக்கவில்லை. நமது சென்னை அணி ஒரு படி மேலே போய் உலகின் தலை சிறந்ததொரு இங்கிலாந்து வீரரை விலைக்கு வாங்கி வாங்கி கட்டி கொண்டது. இதில் அந்த அணி தலைவர் வேறு இங்கு விளையாடியதால் அவரது கால் முறிந்து போனதாகவும் இது தங்கள் அணிக்கு பெரும் இழப்பு என்றும் கூறுகிறார்.சிரிப்பதை தவிர ஒன்றும் முடியவில்லை.
மல்லையா சாராயத்தில் சம்பாதித்ததை கிரிக்கெட்டில் விடவேண்டும் என்பது அவரது தலை எழுத்து.இவருக்கு பீட்டேர்சன் எனும் உலகின் மிக சிறந்த வீரர் ஒருவர் கிடைத்தார். சாமி! அணியை தோற்கடிக்க இவர் ஒருத்தர் போதும் என்ற போதிலும் துணைக்கு ரெண்டு நியூசி வீரர் கள் பிரமாத படுத்திவிட்டனர்.
சென்னை அணியில் ஜாகோப் ஓரத்தின் இடத்தில் இலங்கையின் துசராவை களம் இறக்கி இருக்கலாம். அவர் மிக சிறந்த வேக பந்து வீச்சாளர் என்பதுடன் பட்டின்கிலும் ஓரளவுக்கு கை கொடுக்க கூடியவர். இவர் இலங்கையின் அடுத்த வாஸ் என்று வர்ணிக்க படுபவர். பிளிண்டோப்பை விட எந்த விதத்திலும் சோடை போகாதவர்.
இதெல்லாம் பரவாயில்லை மேற்கிந்திய தீவுகளை உலக கோப்பையை விட்டு விரட்டி அடித்த வாங்க தேச கேப்டன் அஷ்ரப்புல் மும்பை அணியால் களம் இறக்கபடுவதே இல்லை.
கொல்கத்தா அணியோ அதிக விலைக்கு வாங்கியும் மொர்டசாவை களம் இறக்குவதே இல்லை. இத்தனைக்கும் அவரது பந்து வீச்சு திறமையும் பேட்டிங் பலமும் அனைவரும் அறிந்ததே. இந்த வீரனை விலைக்கு வாங்காமல் இருந்திருந்தால் ஆவது பிறராவது வாங்கி இருப்பார்.இப்படி விலைக்கு வாங்கி ஒருவரது திறமையை முடக்குவது நியாயமா?
இப்படி தொட்டதற்கெல்லாம் பயிற்சியாளரை பிடித்து தொங்கும் மெக்குலத்தை முதலில் தூக்கி எறிந்தால்தான் கொல்கத்தா உருப்படும். கங்குலியை போன்று இளம் வீரர்களை ஊக்குவிக்கும் ஒரு கேப்டனே இப்போது அணியின் தேவை.
சென்னை வெற்றி பாதையில் பயணிப்பதால் இந்திய அணிக்கு ஒரு நன்மை உள்ளது . ரெய்னாவின் தொடரும் அதிரடியும் தோனியின் ஆட்டம் மறுபடியும் வலுவகியுள்ளதும் தான் அது. பத்ரிநாத் படம் கட்டினாலும் அது இந்திய அணிக்கு வந்ததும் செல்லாமல் போவது வருத்தமாய் உள்ளது. இந்த முறை பி எல் சரியில்லை .சிக்ஸர்கள் பறந்தால் ஆடவேண்டிய சிட்டுக்கள் முதல் பத்து ஓவர்கள் பந்து வீசும் அணிக்காக எப்படியும் ஒரு நான்கைந்து முறை ஆடுகிறார்கள். என்ன செய்வது சிக்ஸர் அடிக்காமல் சிட்டுகளை ஆட வைக்க இதை எளிய முறை வேறு உள்ளத என்ன...
பதிவு பிடிஞ்சிருந்தா வோட் பண்ணுங்க இல்லாட்டியும் வோட் பண்ணுங்க ... வேற வழி இல்ல உங்களுக்கு எனக்கும்தான்...