புதன், 4 மார்ச், 2009

பாராளுமன்ற தேர்தலும் படாத பாடு படும் மாணவ கண்மணிகளும்.காணாமல் போன தோழர் அறிவிழியும்.

வந்துடுச்சு அடுத்த தேர்தல் தேதி அறிவிப்பு .இனி நம்ம பசங்களுக்குஇருக்கு ஆப்பு. நமது நாட்டில் தான் தேர்தல் என்றவுடன் பள்ளி கல்லூரிதேர்வுகளை மூன் கூட்டியே நடத்தும் ஒரு அவலம் காணப்படுகிறது.

நம் மாணவ கண்மணிகளில் நகரங்களில் இருப்போரை தவிர ஏனையகிராமப்புற பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் ஆசிரியர்களின் ஊக்குவிப்பாலும்அவர்களது அயராத உழைப்பினாலும் தான் தேர்ச்சியே அடைவர் என்பதுஅனைவரும் அறிந்ததே.

அவர்களுள்ளும் வைரங்கள் இருக்கலாம், எனினும் அவர்களைகண்டறிந்து பட்டை தீட்டுவது ஆசிரியரின் கடமையாகும்.பெரும்பாலானமாணவர்கள் தேர்வுக்கு சில நாட்களுக்கு முன்பே தேர்வை எதிர் கொள்ள தயார்ஆவர் என்பது எனது கருத்து.

அவர்களக்கு ஆசிரியர்கள் சிறப்பு வகுப்புக்கள் மற்றும் தேர்வுகள் வைத்துஅவர்களது தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க செய்வர்.

கல்லுரிகளில் நிலைமை சற்று தேவலாம். மாணவர்கள் தேர்ச்சி பெறாதபட்சத்தில் மறுமுறை எழுதி தேறலாம்.இதற்கான செலவும் குறைவு.இதிலும்சிக்கல் இருக்கிறது அது யாதெனில் இறுதியாண்டு மாணவர்கள் தமது தேறாததேர்வுகள் பலவற்றை தீர்க்கும் பொருட்டு எழுதுவர். அதற்கான கால அளவும்தேர்தல் அறிவிப்பால் மண்ணாகும் என்பது நிதர்சனமான உண்மை.

இப்படி தேர்தல்களை இந்த பருவத்தில் நிகழ்த்துவதை தேர்தல் ஆணையம்சற்று மாற்றலாம் எனினும் காஸ்மீர் போன்ற பகுதிகளில் நிகழும் பருவ காலசீதோசன நிலையை கருத்தில் கொண்டே தேர்தல்கள் இக்காலத்தில்நிகழ்கின்றன.

நம் தமிழகத்தில் இன்னும் கூட்டணி பேச்சுவார்த்தைகள் முடிந்தபாடில்லை. எதிரிகள் இனி நண்பர்கள் ஆவர்; நண்பர்கள் எதிரிகள் ஆவர்.கலைஞர் அவர்களின் தொலைக்காட்சி பெட்டிகளும் எரிவாயு அடுப்புகளும்ஓட்டுகளை அள்ளுமா அல்லது அம்மையார் மற்றும் அவர்களது கூட்டணியின்
புகார்கள் அள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்போம்.

நியுசிலாந்தில் அதிரடியாக வெடித்த சேவாக் மற்றும் ரெய்னாவுக்குவாழ்த்துக்கள்.
கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய கோழைகளுக்கு கண்டனங்கள்.
இத்தாக்குதல் நிகழாமல் இருப்பின் தொடர்ந்து இரண்டு இரட்டை சதங்களைவிளாசிய சமரவீராவுக்கு பாராட்டுகள் குவிந்து இருக்கும்.

இன்றோ அவர் கால்களில் அடிபட்டு அடுத்த தொடருக்கு வெகு நாட்கள்காத்திருக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகியுள்ளார்.அவர் விரைவில் குணம்பெற இறைவனை வேண்டுவோம்.

இலங்கை அணி தலைவர் மகேலே தலைவராக விளையாடும் கடைசிதொடரில் இப்படி அதிர்ச்சியை அளித்த கயவர்கள் நாசமாய் போக.

இலங்கையில் தொடரும் இனபடுகொலைகளும் விரைவில் வீழஇறைவனை வணங்குவோம்.

நண்பர் அறிவிழி அவர்களே எனக்கு இந்த பதிவுலகத்தை அறிமுகம் செய்தார் எனினும் அவர் தற்சமயம் பதிவுகள் இடுவது இல்லை.இதற்கான காரணம் எனக்கு தெரிந்தவரை அவர் பதிவிற்கு அடிமை ஆக தொடங்குவதாக அவருள் எழுந்த ஐயயமே! இது முற்றிலும் உண்மை முன்பு எனக்கு பல விதங்களில் கணினியை விளக்கி கூறிய பதிவிட தொடங்கிய பிறகு பெரும்பாலும் அதனை பற்றியே பேசினார் .

இதனால் வெறுப்பான நான் சில காலம் பதிவிட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் அவர் இதனை விட்டு மீண்டது எனக்கு மகிழ்ச்சியே.

எனினும் அவரை போன்ற மிக நாகரிகமான துடிப்பான ஒரு பதிவர் இனி வருவர்
என்பது கஷ்டம்தான்.எனவே அவர் மீண்டும் பதிவிட வேண்டும் என்பதே எனது ஆசை.

அவரது பிரியம் போல் அவர் மீண்டும் செயல் படவேண்டும் என்பதே எனது ஆசை.

















2 கருத்துகள்:

  1. ஒரு விடயத்தை விட முடியாட்டி என்ன செய்யலாம்? ஒதுங்குவது சரியா? அப்படியாயின் எல்லாம் வெளிவேசமா?

    பதிலளிநீக்கு
  2. அவரது தொழில் மற்றும் குடும்ப உறவுகளோடு அவர் செலவிடும் நேரம் குறைந்த படியால் தான் அவர் பதிவுலகத்தை விட்டு வெளி ஏறினார்.மற்றபடி மதுரை மைந்தர்கள் எதகும் அஞ்சி ஓட மாட்டோம்.அவர் மீண்டும் புத்துணர்ச்சியோடு வருவார்; வெல்வார்.

    பதிலளிநீக்கு