புதன், 19 நவம்பர், 2008

எங்க சங்கத்து சார்பா உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

தோழர் அறிவிழி கலகக்காரர்களை கண்டித்து இட்ட பதிவில் வந்த பின்னுட்டங்களை நான் பதிவாக இட்டுள்ளேன்
நன்றி அறிவிழி



மதுரைக்காரன் சொன்னது…

நீங்க மட்டும் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறிங்க எங்க சங்கத்து சார்பா உங்க வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிவைக்கப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்

பெயரில்லா சொன்னது…

\\ சில நாட்களுக்கு முன்னர் உசிலம்பட்டிப் பகுதியில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் பள்ளி மாணவர்கள் அப்பகுதியில் உள்ள கடைகளில் மேல் கல் வீசித் தாக்குதல் நடத்தி உள்ளனர். \\

இப்படி நடந்ததா?

திருப்பூரான் சொன்னது…

எதற்கெடுத்தாலும் பொது மக்களைத் தாக்குவது என்பதுதான் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது.

துபாய் கணேஷ் சொன்னது…

உங்களின் கோபமும், ஆதங்கமும் சரிதான்.

இராகவன், நைஜிரியா சொன்னது…

இவர்கள் கல் வீசுவது, அரசு பேருந்துகளை நோக்கி மட்டும்தான். தனியார் பேருந்துகளை நோக்கி வீச மாட்டார்கள். அது மாதிரி, கலகத்தின் போது, சாதாரண மக்களின் வாகனங்கள் மட்டும் எரிக்கப்படும். இது மட்டும் எப்படி சரியாக நட்கின்றது எனப்புரியவில்லை. இராகவன், நைஜிரியா

ஆட்காட்டி சொன்னது…

திருப்பி அடிச்சா சரியாகும்.

ஆசப் படுறவன் சொன்னது…

நல்ல கருத்த எழுதுனா ஆட்டோ பரிசா தருவிங்களா?

பஸ்சுல கல் எருஞ்சவன் சொன்னது…

ஆமா ஆட்டோவும் தருவோம் , அது நெறைய ஆளுகளையும் தருவோம்

கனடா சுபா சொன்னது…

சண்ட போடுறவங்க அவங்களுக்குள்ள தான் போட்டுக்கிரனும் தவிர மக்களை தொந்தரவு செய்யக் கூடாது.

பெயரில்லா சொன்னது…

"சாது மிரண்டா காடு கொள்ளாது " ஆனா சாது எப்பவுமே மெரலவே மெரலாதுங்க.

குடிகாரன் சொன்னது…

ஆட்டோவ நல்ல வெலக்கி வித்துட்டு, அந்த ஆளுகளை எல்லாம் அல்லக்கை வேலைக்கு வச்சிக்கோ தல...

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

ஆட்டோ என்ற சொல்லை ஆட்சேபிக்கிறோம்

குடிகாரன் சொன்னது…

வந்துட்டான்யா வந்துட்டான்யா..........

கேப்டன் படை சொன்னது…

அய்யா ஆட்டோக்கு தமில்ல என்னனு சொல்லணுங்க....

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

ஆட்டோவை முன்று சக்கர பயணிகள் வாடகை ஊர்தி அப்படின்னு சொல்லுங்க......

கேப்டன் படை சொன்னது…

போயா டுபாக்கூரு போன தபா உன் பேச்சைக் கேட்டுகுனு டீக் கடையில போயி டீக்குப் பதிலா கொட்டை வடி நீர்னு கேட்டு எல்லாப் பேரும் சேந்து பின்னிட்டானுங்க...

குடிகாரன் சொன்னது…

என்னாது கொட்டை வடி நீர் கேட்டயா? அடிக்கிரதோட உன்ன விட்டாங்களே?

யோசிப்பவன் சொன்னது…

ஏங்க அதான் டீக்கு தேநீர் அப்படின்னு ஒரு பெயர் இருக்கே?

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

தேநீர் என்பதை விட கொட்டை வடி நீர் என்பதே சரியான தமிழ் சொல்.

குடிகாரன் சொன்னது…

இன்னும் நீ இங்கேதான் இருக்கையா?

கேப்டன் படை சொன்னது…

அய்யா தனித்தமிழ், உன்ன்னோட அட்ரஸ் கொடுயா, அய்யயோ மன்னிச்சுக்கோ முகவரி கொடுப்பா

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

யாதும் ஊரே யாவரும் கேளிர்

குடிகாரன் சொன்னது…

ஏன்யா அட்ரஸ் கேட்டா கெட்ட வார்த்த சொல்லி திட்டுற,

தனித்தமிழ் சங்கம் சொன்னது…

அது கெட்ட வார்த்தை இல்லை தோழரே, தமிழ் பழமொழி . உங்களிடம் வந்து தமிழ் பேச சொன்னது என்னுடைய தவறுதான் அய்யா.

கேப்டன் படை சொன்னது…

அப்பிடி ஒதுங்கி ஓடீறு , "தமிலன் என்று சொல்டா தல நிமிந்து நில்லடா " அப்படின்னு ஏங்க கேப்டன் சொல்லிருக்காரு. என்கிட்ட மோதாத

அறிவிழி சொன்னது…

அனானி தோழர்களே இந்தப் பதிவை நான் தமிழகத்தின் முக்கியப் பிரச்சினைக்காக எழுதியுள்ளேன் , எனவே உங்கள் கும்மிகளை எனது வேறு காமெடிப் பதிவுகளில் வைத்துக் கொள்ளலாமே..
நன்றி தோழர்களே உங்கள் பங்களிப்பிற்கு.....

பெயரில்லா சொன்னது…

இவர்களுக்கும் அப்பாவி பொதுமக்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்கும் என்ன வித்தியாசம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக